இந்நாள் – அந்நாள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கலைஞர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான
இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நாள் இன்று (14.12.2006)

இன்று கலைஞர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்ட நாள் (14.12.2006)

கலைஞர்  அவர்கள் தந்தை, பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் சமூக நீதிப் பாதையில் பயணித்தவர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் (UPA) பங்கு: 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம்  மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (மத்தியில்) ஒரு முக்கியப் பங்களிப்பினைக் ெகாண்டிருந்தவர் கலைஞரின் செல்வாக்கு மற்றும் தி.மு.க-வின் ஆதரவு இல்லாமல் கூட்டணி அரசு செயல்பட முடியாது என்ற நிலை இருந்தது.

கலைஞர் அவர்கள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்குத் தொடர்ச்சியாகக் கடிதங்கள் எழுதியும், நேரடிச் சந்திப்புகள் மூலமாகவும் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், ஒன்றிய கல்வி நிறுவனங்களில் ஓபிசி-க்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமலாக வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

93ஆவது திருத்தத்திற்கான மூல காரணம்: 2006ஆம் ஆண்டு,ஓபிசி இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்பில் 93ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திருத்தமானது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து ஒன்றிய கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் அதிகாரம் அளித்தது.

இந்த அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அதற்கான சட்டத்தை (ஒன்றிய கல்வி நிறுவனங்கள் சட்டம், 2006) நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தி.மு.க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவை வழங்கியதுடன், இந்தச் சட்டம் சட்டச் சிக்கல்களில் சிக்கிவிடாமல் இருக்க ஆதரவாக வாதிட்டனர்.

ஒன்றிய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம், 2006: இந்தச் சட்டத்தின் மூலமே,  அய்.அய்.டி. அய்.அய்.எம் மற்றும் எய்ம்ஸ் போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் ஓபிசி- பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட 69% இட ஒதுக்கீடு நடை  முறையில் உள்ளது. தமிழ்நாட்டில் கடைப்  பிடிக்கப்படும் சமூக நீதியைப் பின்பற்றி, ஒன்றிய அரசும் ஓபிசி- பிரிவினருக்கு உரிய பங்களிக்க வேண்டும் என்று கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற வேண்டிய சமூகங்களின் பட்டி யலைத் திருத்துவதிலும், அதனை ஒன்றிய அரசு கவனத்திற்குக் கொண்டுவருவதிலும் அவர் காட்டிய அக்கறை, ஒன்றிய  கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் முழுப் பலனும் உண்மையான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்தது.

2006ஆம் ஆண்டு ஓபிசி- இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதில், கலைஞரின் பங்கு என்பது வெறும் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல; அவர் ஒன்றிய அரசில் அரசியல் நிர்ப்பந்தம் கொடுத்து, சட்டத்தை நிறைவேற்ற சரியான ஆற்றலுள்ள தூண்டுகோலாகச் செயல்பட்டார்.

சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டு, அதிகாரத்தில் இருந்தபோது அதைச் சட்டமாக நடைமுறைப்படுத்தி யதில் அவரது பங்கு நிரந்தரமாகப் பதியப் பட்டுள்ளது. இது கல்வி வாய்ப்புகளைப் பரவலாக்கி, சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட உதவிய ஒரு மாபெரும் சமூக நீதியின் வெற்றி ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *