வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. பதிவு
சென்னை, டிச. 14– திமுக மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி.யின் எக்ஸ்தள பதிவு: தமிழ் நாட்டைச் சேர்ந்த பி.எட் மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள ஸ்வையம் தேர்வு மய்யங் களை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதை தொடர்ந்து 16,000 தேர்வர்களில் 14,700 பேருக்கு அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1,300 தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நன்றி.
