அமெரிக்க தலைமையில் ‘ஏஅய்’ ஒத்துழைப்பை அதிகப்படுத்த 8 நாடுகள் அடங்கிய புதிய கூட்டமைப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியாவிற்கு இடமில்லை

வாசிங்டன், டிச. 14– நம்பகமான நட்பு நாடுகளுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) துறையில் ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க, எட்டு நாடுகள் அடங்கிய ‘பாக்ட் சிலிக்கான்’ (Pact Silicon) கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கி யுள்ளது.

ஆனால், இதில் இந் தியாவுக்கு இடமில்லை என்ற தகவல் வெளி யாகியுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்ப…

‘பாக்ட் சிலிக்கான்’ என்பது புதிய வகையான பன்னாட்டு கூட்டமைப்பு ஆகும். புதிய செயற்கை நுண்ணறிவு யுகத்தின் பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர, உலகின் மிகவும் மேம் பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ள எட்டு நாடுகள், அமெரிக்கா தலைமையிலான இந்தக் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கூட்டமைப்பு

நம்பகமான நட்பு நாடுகளுடன் ஆழமான ஒத்துழைப்பை அடிப் படையாகக் கொண்டு அமெரிக்கா தலைமையில் இந்தக் கூட்டமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது.

இதில், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல், அய்க்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

சிலிக்கான் நகரத்துக்குத் தேவையான தடையற்ற விநியோக சங்கிலியை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டாயச் சார்புகளைக் குறைத்தல், செயற்கை நுண்ணறிவுக்கு (ஏஅய்) அடிப்படையான பொருட்கள் மற்றும் திறன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்குள் உறுதி செய்யும். இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா நீங்கலாக,

இருப்பினும், அமெ ரிக்கா உருவாக்கியுள்ள இந்த புதிய ஏஅய் கூட்ட மைப்பில் நெருங்கிய நட்பு நாடாகக் கருதப் படும் இந்தியாவுக்கு இடமளிக்கப்படவில்லை. இந்தியா நீங்கலாக, குவாட் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த புதிய முன்னெடுப்பான ‘பாக்ட் சிலிக்கான்’ கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *