பெர்லின், டிச. 14– அய்ரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந் திருக்கும் சகாப்தம் முடிந்து விட்டதாகவும், இனிமேல் அமெரிக்காவின் மீதான சார்பைக் குறைத்து, தங்களின் பாது காப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் ஜெர்மனியின் முக்கிய எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவர் ப்ரெட்ரிக் மெர்ஸ் எச்சரித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல தசாப்தங்களாக அய்ரோப் பாவின் கூட்டுப் பாதுகாப் பிற்கு அமெரிக்கா ஒரு முக்கியப் பங்காற்றி வந்தது. நேட்டோ அமைப்பின் மூலம் அமெரிக்கா அய்ரோப்பிய நாடுகளுக்கு பாதுகாப்பு உறுதிமொழியை வழங்கி வந்த நிலையில், இந்த நிலைப்பாடு நிரந்தரமல்ல என்பதை அய்ரோப்பா உணர வேண்டும் என மெர்ஸ் கருத்து தெரி வித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளி யுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குறிப்பாக உள்நாட்டு சவால்களுக்கு அமெரிக்கா அதிக கவனம் செலுத்தும் போக்கு காரணமாக, அய்ரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த பாது காப்பு திறன்களை மேம் படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அய்ரோப்பிய நாடுகள் கூட்டாகச் செயல்பட்டு, தங்களின் பாதுகாப்புச் செலவினங்களை அதி கரித்து, இராணுவ பலத்தை வலுப்படுத்துவதன் மூலமே இந்த புதிய சகாப்தத்தில் தங்கள் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று ப்ரெட்ரிக் மெர்ஸ் உறுதியாகத் தெரிவித் துள்ளார்.
