கருநாடகாவில் இட ஒதுக்கீடு 75 விழுக்காடாக உயர்த்தப்படும்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

1 Min Read

அரசியல்

பெங்களூரு, மே 3- கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று (2.5.2023) பெங்களூருவில் வெளியிட்டார். இதனை கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவ குமார், மூத்த தலைவர்கள் சித்தராமையா, பரமேஷ்வர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண் டனர்.

அப்போது மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அனைத்து குடும் பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அரசு பேருந்தில் மகளிர் இலவசமாக பய‌ணிக்கலாம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 1500 ஊக்கத் தொகையாக 2 ஆண்டுகளுக்கு வழங்கப் படும். வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பாஜக அரசு அமல்படுத்திய புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும். சிறுபான்மை யினருக்கு எதிராக பாஜக‌ கொண்டுவந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும். கருநாடக அமைதியை கெடுக்கும் பஜ்ரங் தளம், பாப் புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்அய்) போன்ற மதம், ஜாதி சார்ந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும்.

உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள 50 விழுக்காடு இடஒதுக்கீடு 75 விழுக்காடாக உயர்த்தப்படும். ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேகேதாட்டுவில் அணைக் கட்ட ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதவிர, அனைத்து தேர்தல் வாக்குறுதி களையும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே அமல்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *