கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.12.2025

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 73 ஆண்டாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூணல்ல; சர்வே தூண்: உயர்நீதிமன்றம் கிளையில் அரசு தலைமை வழக்குரைஞர் வாதம்.

* பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமை தொகை ரூ.1000இல் இருந்து மேலும் உயரும்: வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மதுரை அருகே திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தை மக்களவையில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் நேற்று (12.12.2025) எழுப்பி பேசினார். அப்போது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகவும், திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு மக்களவையில் இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

* யு.ஜி.சி., ஏ.அய்.சி.டி.இ., என்.சி.டி.இ. என்ற அனைத்து அமைப்புகளையும் ஒரே அமைப்பாக கொண்டுவர ஒன்றிய கல்வித்துறை முடிவு.

* வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் நடத்தும் பேரணியில் தெலங்கானா அமைச்சர்கள் கலந்து கொள்வர்.

தி இந்து:

* பாஜக ஆட்சியில் ஆலந்து வாக்காளர் மோசடி வழக்கில் மேனாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குட்டேதார், மகன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இந்த மோசடியில், ஆலந்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 6,000 வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக படிவங்களைத் போலியாக தயாரித்தது அடங்கும்.

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு அய்எம்எஃப் ‘சி’ தரத்தை வழங்கியுள்ளது, இது இரண்டாவது மிகக் குறைந்த தரமாகும். இது குறித்து ஊடகங்கள் மவுனம் சாதிப்பதை கண்டித்துள்ளார் கரண் தாப்பர்

தி டெலிகிராப்:

* வாக்கெடுப்பு முரண்பாடுகள், சிசிடிவி அணுகலை கட்டுப்படுத்துதல் மற்றும் வாக்காளர் பட்டியல் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் செய்து வருவதை எதிர்த்து காங்கிரஸ் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ராகுல் உரையின் போது பாஜக தலைவர் குடிபோதையில் இருந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு: ‘தேர்தல் சீர்திருத்தங்கள்’ குறித்த விவாதத்தின் போது ராகுல் காந்தியின் உரையை தொந்தரவு செய்ய முயன்றபோது பாஜக மூத்த உறுப்பினர் ஒருவர் மக்களவைக்கு “குடிபோதையில்” வந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுக்தியோ பகத் குற்றம் சாட்டினார்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *