கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

14.12.2025 ஞாயிற்றுக்கிழமை போடி – தந்தை பெரியார்,
ஆசிரியர் பிறந்த நாள் மாபெரும் குருதிக்கொடை முகாம்

போடி: காலை 10 மணி முதல் 2 மணி வரை *இடம்: சிறீகணேஷ் ஆரம்பப்பள்ளி, அம்மா உணவகம் எதிர்சந்து, தந்தை பெரியார் சிலை அருகில், போடி *வரவேற்புரை: பேபி சாந்தாதேவி (செயலாளர், பெரியார் சேவை மய்யம்) *தலைமை: ஏ.பாலாஜி *தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் பற்றி: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: டாக்டர் ஜே.பி.ராகவன், டாக்டர் என்.மனோகரன் *தொடக்கி வைப்பவர்: ஆர்.புருசோத்தமன் (தி.மு.க. நகர செயலாளர்) *சான்றிதழ் வழங்கி உரை: இராஜேஸ்வரி சங்கர், கிருஷ்ணவேணி பச்சையப்பன் *நன்றியுரை: ம.சுருளிராசு *ஏற்பாடு: தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம்.

தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்
– கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம்

போடி: காலை 11.30 மணி *இடம்: பெரியார் அரங்கம், பெரியார் சிலை அருகில், போடி *பொருள்: ஜனவரி 2026 (8.1.2026) தமிழர் தலைவர் தேனி வருகை – பெரியார் உலகம் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து *தலைமை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்)  *முன்னிலை: ஸ்டார் நாகராஜன் (மாவட்ட துணைத் தலைவர்), பு.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) *செயலூக்கவுரை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) *இவண்: போடி ம.சுருளிராஜ் (மாவட்ட தலைவர்).

லால்குடி மாவட்டத்தில்
கழக இளைஞரணி அமைப்புக் கூட்டம்

லால்குடி: காலை 10 மணி – மண்ணச்சநல்லூர், மண்ணச்சநல்லூர் ஒன்றியம்; மாலை 3 மணி – விடுதலைபுரம், புள்ளம்பாடி ஒன்றியம்; மாலை 6 மணி – கீழவாளாடி, லால்குடி ஒன்றியம் *முன்னிலை: தே.வால்டேர் (மாவட்ட காப்பாளர்), ப.ஆல்பர்ட் மாவட்ட காப்பாளர்), முனைவர் வீ.அன்புராஜா (மாவட்டத் தலைவர்), ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: சா.இசைவாணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), சு.பனிமலர்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்),

ஆவடி மாவட்டக் கழக
கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 05-30 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) *பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல், 25-12-2025தமிழர் தலைவர் ஆசிரியர்  ஆவடி மாவட்டத்திற்கு வருகை * ஆவடி மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)

 

 

 

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *