3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பாடு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.13 தமிழ்நாட்டில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்று நோய் தடுப்பூசித் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உலக எய்ட்ஸ் தினம்

சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் -2025 நிகழ்வு நேற்று (12.12.2025) நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்று எச்அய்வி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள், விழிப்புணர்வு குறும்படத்துக்கான குறுந்தகடை வெளியிட்டார். மேலும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, எச்அய்வி-எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சேவை பணியில் சிறந்து விளங்கிய மருத்துவமனைகள், சிகிச்சை மய்யங்கள், மருத்துவர்கள், தன்னார் வலர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘இடையூறுகளை கடந்து எச்அய்வி-எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்’ ஆகும். 2030-க்குள் எச்அய்வி-எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத தமிழகத்தை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தொற்றின் தாக்கம் மிகவும் குறைந்துள்ளது. இந்தியாவின் எச்அய்வி பாதிப்பு 0.23 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 0.16 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாடுதான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 100 சதவீதம் கருவுற்ற தாய்மார்களுக்கு எச்அய்வி மற்றும் சிபிலிஸ் பரிசோத னைகள் செய்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி  மற்றும்  மருத்துவ செலவுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என 7,618 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் தொடக்கம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசுநிதியுதவி பள்ளிகளில்படிக் கும் 9 வயது முதல் 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க தடுப்பூசி போடும் திட் டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். இத் திட்டத்தில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள். முதல் தவணையாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணா மலை, தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல்முறையாக இந்த திட் டத்தை தொடங்குகிறது. இந் தியா முழுவதும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு,கொண்டு வந்தால், ஒட்டுமொத்த பெண் குழந்தை களும் பலன் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிமேயர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப் பாடு சங்க திட்ட இயக்குநர் ஆர். சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் திலகம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *