சென்னை, டிச.12 தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்ய செய்திக் குறிப்பில்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 398.3 மிமீ மழை பெய்ய வேண்டும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 (நேற்று) வரை 420.9 மிமீ மழை பெய்துள்ளது. 6 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 2 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
சென்னையில் இயல்பான நிலையில் 731.9 மிமீ மழை பெய்யும் நிலையில், இன்று வரை 715.1 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. மதுரையில் இயல்பான மழை அளவு 337.7மிமீ , பதிவான மழை 350.5மிமீ 4 சதவீதம் அதிகம். கோவையில் இயல்பான மழை அளவு 315.1மிமீ , பதிவான மழை 280.4மிமீ, 11 சதவீதம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.
