மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.11- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.59 இலட்சம் மதிப் பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில்   10.12.2025 அன்று சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு, சென்னை பெண்கள் (மாந்தோப்பு) மேல்நிலைபள்ளியில் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் வழகும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 50 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50,90,000/- மதிப் பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத் தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,72,000/- மதிப்பிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,44,900/- மதிப்பிலான திறன் பேசிகள் (Smart Phone), 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 63,590/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 28,600/- மதிப்பிலான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் என ஆக மொத்தம் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58,99,090/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, மண்டலக்குழுத் தலைவர் (கோடம்பாக்கம்) எம்.கிருஷ்ணமூர்த்தி, தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *