திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல; ‘சர்வே தூண்’ ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை அளித்த பதில் வைரல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, டிச.12 திருப்பரங்குன்றத்தில் இருப்பதுதீபத்தூண் அல்ல; சர்வே தூண் என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்கு பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைக்கான ‘சர்வே தூணில்’ தீபம் ஏற்ற பாஜ மற்றும் இந்து அமைப்பினர் கோரி வருகின்றனர்.

ஆனால் இது ‘சர்வே கல் தூண்’ என பல்வேறு தொல்லியல் ஆதாரங்களும் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள தூண் குறித்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் கடந்த 2022 ஜனவரியில் ஆர்டிஅய் மூலம் கேட்டிருந்தார்.

இதற்கு அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய நில அளவைத்துறை அளித்துள்ள பதிலில், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது ‘சர்வே கல்’ தான். 1808-1809, 1871ஆம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படியும் ஒரு விவாகரத்தா?

பக்தி மத பைத்தியத்தால் ஏற்பட்ட மணமுறிவு!

l சமையலில் பூண்டு, வெங்காயத்தால்

   ஏற்பட்ட கருத்து வேறுபாடு

l 23 ஆண்டு கால மண வாழ்க்கை முறிந்தது

அகமதாபாத்,டிச.12 சமையலில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்தியது தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, 23 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது .குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 2002-இல் திருமணம் நடந்தது. மனைவி சுவாமி நாராயண பக்தையாக இருப்பதால், சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை தவிர்த்து வந்தார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர், இது இருவருக்கும் இடையே தொடர் தகராறுகளுக்கு வழிவகுத்தது. அப்​போதும் பிரச்​சினை தீராத​தால், குழந்​தை​யுடன் கடந்த 2007ஆம் ஆண்டு மனை​வி, தனது தாய் வீட்டுக்​குச் சென்றார். இதனால் கடும் மன உளைச்​சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகம​தா​பாத் குடும்​பநல நீதி​மன்​றத்​தில் 2013ஆம் ஆண்​டில் மனு தாக்​கல் செய்​தார்.

விவாகரத்து

இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விவாகரத்து மனுவை விசாரித்த குடும்​ப நல நீதி​மன்​றம், இரு​வருக்​கும் விவாகரத்து வழங்கி உத்​தர​விட்​டது. மேலும், மனை​விக்கு வாழ்க்கைப்படி வழங்கவும் கணவருக்கு உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில் விவாகரத்து வழங்​கியது செல்​லாது என அறிவிக்கக் கோரி குஜ​ராத் உயர் நீதி​மன்​றத்​தில் மனைவி மனு தாக்​கல் செய்தார். இந்த மனு நீதிப​தி​கள் சங்​கீதா விஷேன், நிஷா தாக்​கூர் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விவகாரத்தை குடும்​ப நல நீதி​மன்​றத்​தில் எதிர்க்கவில்லை என்று தெரிந்​ததும், மனை​வி​யின் மனுவை குஜராத் உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. மேலும், நிலு​வை​யில் உள்ள வாழ்க்கைப்படி தொகையை தவணை முறை​யில் நீதிமன்றத்​தில் செலுத்​தும்​படி கணவருக்கு
நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

வரலாறு காணாத சரிவு…  மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ரூ.90.33 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, ஆர்.பி.்ய். முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *