கோயிலிலும் ராசியில்லாதது உண்டா? அந்தோ பரிதாபம்! இனி திருமணம் செய்ய வரவேண்டாம்! கோயிலில் திடீர் அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களுரு, டிச. 11- பல நூறு ஆண்டுகளாகத் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த சோமேஸ்வர் கோயிலின் அதிரடி முடிவின் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் வளாகத்தில் இனி திருமண விழாக்கள் எதுவும் நடத்தப்படாது என்று கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விவாகரத்து சான்றிதழ்
கேட்ட இணையர்

இந்த திடீர் முடிவுக்குப் பின்னணியில் உள்ள காரணம், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  பல ஆண்டுகளாக திருமண நிகழ்விற்கு பெயர் பெற்ற சோமேஸ்வர் கோயில்.

ஆனால், அண்மைக் காலமாக இந்தக் கோயிலில் திருமணம் செய்தவர்கள்  தொடர்ந்து திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் முடித்துக் கொண்டு வருகின்ற்னார்

விவாகரத்து நடைமுறைகளுக்காகத் திருமணத்திற்கான ஆவணங்களை, ‘விவாகரத்துச் சான்றிதழ்’ என்ற பெயரில் கேட்டு கோயில் நிர்வாகத்தை அணுகுவது அதிகரித்துள்ளது.

ராசியில்லாத கோயில்

விவாகரத்து செய்யும் இணையர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இந்தக் கோயிலுக்கு ‘ராசியில்லாத கோயில்’ என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இதனால், கோயிலின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் ஏற்படுவதாக நிர்வாகம் கருதியது.

“விவாகரத்துச் சான்றிதழ் கேட்டு
வர வேண்டாம்”

கோயில் நிர்வாகத்தின் சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “அண்மைக் காலமாக திருமணம் செய்த பலர், விவாகரத்து செய்ய முடிவெடுத்து திருமணத்திற்கான ஆவணங்கள் கேட்டு கோயிலுக்கு வருவதால், இனி கோயிலில் திருமணம் நடத்துவது ரத்து செய்யப்படுகிறது. விவாகரத்துக்காகத் திருமண ஆவணங்களைக் கேட்டு யாரும் இங்கு வர வேண்டாம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

“இந்தக் கோயிலில் திருமணம் செய்தால் விவாகரத்து நிச்சயம் நடக்கிறது” என்ற பொதுமக்களின் பேச்சைக் கட்டுப்படுத்தும் விதமாக, நிர்வாகம் இத்தகைய ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளதாம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *