கடவுள் காப்பாற்றவில்லை கோயில் குடமுழுக்குக்குச் சென்றபோது மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு: செய்யாறு அருகே துணிகரம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செய்யாறு, டிச.11- செய்யாறு அருகே கோயில் குடமுழுக்குக்குச் சென்றிருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் 4 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் ெசன்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி. இவர் கடந்த 8ஆம்தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கோயில் குடமுழுக்கைத் தரிசிப்பதற்காக கடந்த 7ஆம்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது மகன் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். நேற்று (10.12.2025) மாலை மல்லிகேஸ்வரி வீடு திரும்பினார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பரண் மீது வைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் ஆள்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மல்லிகேஸ்வரி தூசி காவல் துறையில் நேற்று (10.12.2025) புகார் செய்தார். அதன்பேரில் துணை ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *