செய்யாறு, டிச.11- செய்யாறு அருகே கோயில் குடமுழுக்குக்குச் சென்றிருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் 4 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் ெசன்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி. இவர் கடந்த 8ஆம்தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கோயில் குடமுழுக்கைத் தரிசிப்பதற்காக கடந்த 7ஆம்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது மகன் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். நேற்று (10.12.2025) மாலை மல்லிகேஸ்வரி வீடு திரும்பினார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பரண் மீது வைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் ஆள்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மல்லிகேஸ்வரி தூசி காவல் துறையில் நேற்று (10.12.2025) புகார் செய்தார். அதன்பேரில் துணை ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.
