கடவுள் சக்தி இவ்வளவுதான்! – கோயில் விழாவில் தேனீ கொட்டி பக்தர்கள் 60 பேர் மருத்துவமனையில் அனுமதி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரூர், மே 3- தருமபுரி மாவட் டம், அரூர் அருகே கோயில் திரு விழாவில்  தேனீக்கள் கொட்டியதில் 100 க்கும் மேற்பட்டோர் காயத் துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.                          

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த  ஈட்டியம்பட்டியில் உள்ள மாமரத்து முனியப்பன் கோயில்  திருவிழா நடைபெற்றது. திருவிழா வில் சுமார் 500 பேருக்கு மேற்பட் டோர் கலந்து கொண்டு,  ஆடு ,கோழி, பன்றி ஆகியவற்றை பலி யிட்டு, பட்டாசு வெடித்தனர்.

அப்போது கோயிலில் உள்ள அரச மரத்தில் கட்டப்பட்டிருந்த மலைத் தேனீ கூட்டின் மீது பட் டாசு பறந்து விழுந்து வெடித்ததில் கூட்டில் இருந்த  தேனீக்கள் அங்கிருந்த பக்தர்களை துரத்தி துரத்தி கடித்தன.

இதனால் பயந்து போன பக்தர்கள் நாலாப் பக்கமும் சிதறி  ஓட்டம் பிடித் தனர். இருப்பினும் மலைத் தேனீ விரட்டி விரட்டி கொட்டியதில் பெண்கள், குழந்தைகள், பெரியவர் கள் என்ன காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வலி யால் அலறித் துடித்து கத்தி கதறி உள்ளனர்.

காயம் பட்டவர்களை அங்கி ருந்தவர்கள்  உடனடியாக மீட்டு அய்ந்துக்கு மேற்பட்ட  108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் தீர்த்த மலை, அரூர், தர்மபுரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டுள்ளனர்.  பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இதனால் கோயில் அருகே பல கிலோமீட்டர் தூரத் திற்கு யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *