வேலூர், டிச. 11- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் இன்று 10-12-2025 மாலை -6-மணியளவில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தெரு முனைக் கூட்டம் குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப. ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி. தனபால் வரவேற்புரையாற்றினார்.
வேலூர் மாவட்ட கழக செயலாளர் உ.விஸ்வநாதன், மேனாள் மாவட்ட காப்பாளர் ச. ஈஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் சி.லதா மாவட்ட கழக துணைச் செயலாளர் மு. சீனிவாசன், வேலூர் மாநகர மாணவரணி தலைவர் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியேற்றம் நகர கழகத் தலைவர் சி. சாந்தகுமார் புரட்சிப் பாடல்கள் பாடினார். இந்த தெருமுனைக் கூட்டத்தில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன் தொடக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார் ஆற்றிய நோக்க உரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் திராவிட சமுதாயம் மானமும் அறிவும் பெற்று சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கனவை நினைவாக்கிட அயராது பாடுப்பட்டு வருகிறார் என்று குறிப்பிட்டார்.
வேலூர் மாவட்ட காப்பாளர் வி. சடகோபன் ஆற்றிய ஆசிரியர் பிறந்தநாள் விழா உரையில், திருப்பரங்குன்றத்தில் அண்மையில் பார்ப்பனர்கள் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற கலவரங்கள்,வாக்கு திருட்டு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை செய்து வரும் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பு கிருமிகள் பெரியார் மண்ணில் பரவாமல் தடுக்கும் அருமருந்துதான் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி என்று குறிப்பிட்டார்.இந்த தெருமுனைக் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் ஆற்றிய சிறப்புரையில் இந்த சமூகத்தை சீரழிக்க பார்ப்பனர்கள் கடவுள்,சாதி,மதம் போன்றைவைகளை கற்ப்பித்து மக்களை அடிமைப்படுத்தி வருகிறார்கள்.மேலும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஏற்படுத்தும் கலவரங்களில் நேரடியாக ஈடுபடாமல் பார்ப்பனரல்லாத மக்களை தூண்டிவிட்டு இவர்கள் தற்காப்போடு இருப்பார்கள். இதுபோன்ற செயல்களில் பயன்படுத்தும் வார்த்தை “இந்துக்களே ஒன்று கூடுங்கள்” இந்து என்றால் இவர்களின் அகராதியில் பார்ப்பனர்கள் மட்டுமே.தன்னை இந்து என்று நம்பும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திரன் என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த இழிவை ஒழிக்கவே தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார்.
இதனையடுத்த அத்தியாயம்தான் கழகம் இப்பேற்பட்ட கழகத்தை தந்தை பெரியார் மற்றும் மணியம்மை ஆகியோர் வழி நின்று வழி நடத்தும் நம் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நம் திராவிட இனத்தை மானமுள்ள சமுதாயமாக மற்ற
வேண்டும் என்று பேசினார்.இறுதியாக குடியேற்றம் நகர கழக அமைப்பாளர் வி.மோகன் நன்றி உரையாற்றினார்.இந்த தெருமுனைக் கூட்டத்தில் கழகம்,பகுத்தறிவாளர் கழகம்,மகளிர் அணி,மாணவர் அணி தோழர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
