தமிழ்நாடு முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மய்யங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு புதிய முயற்சி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.9– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மய்யங்கள் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த மய்யங்கள், கிராமப்புற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கல்வியறிவு பெறவும், அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்கவும், கல்வி மற்றும் இதர பயனுள்ள தகவல்களை வழங்கவும் ஒரு முக்கிய களமாகச் செயல்படும். மேலும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இந்த மய்யங்களின் அடிப்படை நோக்கம் ஆகும்.

இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 126 கிராமங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட 126 கிராமங்களில் அமைக்கப்படவுள்ள இந்த அறிவுசார் மய்யங்கள், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டிருக்கும்.

இவற்றில் சில முக்கியமான வசதிகள்: விவசாயிகள், சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சி மய்யம், கணினி அறை, நூலக அறை,  நிர்வாக அலுவலகம், ஆலோசனை வழங்கும் அறை, கழிப்பறைகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்த அறிவுசார் மய்யங்கள் மூலம், கிராமப்புற மக்கள் தேவையான தகவல்களைப் பெற்று, அரசு நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *