வெளிச்சம் தரும் சுவர்க் கல்

1 Min Read

அரசியல்

கண்ணாடிக் கட்டிகளை வைத்து சுவர்களை உருவாக்குவது தற்போது ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், அதைவிட வலுவான, அதே சமயம் நல்ல வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கும் ஒரு புதிய பொருளை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘எம்ப்பா’ ஆராய்ச்சிக் குழும விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மிகவும் மென்மையான ‘சிலிக்கா ஏரோஜெல்’ துகள்களையும் கண் ணாடித் தகடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதியவகை கல்லுக்கு ‘ஏரோபிரிக்ஸ்’ என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

ஏரோபிரிக்ஸ், ஆறு பகுதியிலும் சிலிக்கா ஏரோஜெல் கண்ணாடித் தகட்டினால் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை அடுக்கினால், வழக்கமான கட்டுமானப் பொருட் களைவிட அதிக பளுவைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

அதிக வெளிச்சத்தை ஏரோபிரிக் சுவர் உள்ளே விட்டாலும், வெப்பத்தை அனுமதிப்பதில்லை. எனவே, பகலில் மின் விளக்குச் செலவும், ‘ஏசி’ போடும் செலவும் மிச்சமாகிறது.

 கட்டுமானத்திற்கு வரவிருக்கும் ஏரோபிரிக்ஸ் பற்றி ‘ஜர்னல் ஆப் பில்டிங் என்ஜினியரிங்’ என்ற ஆய்விதழ் மிகவும் மெச்சியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *