பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த கார்- 10 பேர் உயிரிழப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாரீஸ், டிச.8– பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள தேவாலயத்திற்கு எதிரே உள்ள ஷோல்ச்சர் சதுக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்தது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 10 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டிய ஓட்டுநர் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *