திண்டுக்கல்லில் நவீன சூரியசக்தி மின் நிலையம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

Viduthalai
1 Min Read

அரசியல்

திண்டுக்கல், மே 4 – தமிழ் நாட்டில் முதன்முறையாக பேட்டரி மூலம் சேமிக்கும் தொழில்நுட்பம் கொண்ட சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

வெளிநாடுகளில், சேமிக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய சூரிய சக்தி மின்நிலையங்கள் உள்ளன.இதனால், உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை சேமித்து வைத்து எப் போது வேண்டுமானாலும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், இந்தி யாவில் இவ்வாறு சேமிக்கும் வசதி கிடையாது.

இந்நிலையில், திண்டுக் கல் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையத்தை அமைத் துள்ளது. தற்போது, அங்கு பேட்டரியில் மின் சாரம் சேமிக்கும் தொழில் நுட்பத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி  வழங்கி உள்ளது. இங்கு அமைக்கப்பட் டுள்ள சரக்குப் பெட்டகம் போன்று பிரமாண்ட வடிவில் இருக்கும் பேட் டரி 4 மெகாவாட்திறன் கொண்டது.

இதுவே  தமிழ்நாட்டில் அமைக்கப்படும் முதல் சேமிக்கும் தொழில் நுட் பத்திலான மின் நிலையம் ஆகும்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதை சேமித்து வைக்கும் வசதி இல்லாததால் அவற்றை உடனே விற்பனை செய்ய வேண்டி உள்ளது. இல்லையென்றால், மின் இழப்பு ஏற்படும்.

இந்நிலையில், பேட்டரி மூலம் சேமிக்கும் திறன் கொண்ட சூரிய சக்தி மின்நிலையம் அமைக்க மின்சார ஒழுங்கு முறை ஆணை யம் அனுமதி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

இதன்மூலம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடிவதோடு, மின் இழப்பு ஏற்படுவதும் தடுக்க முடியும்” என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *