தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிபிசிஅய்டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு

சென்னை, டிச.8– தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஅய்டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த கடிதத்தை இணைத்து பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதிநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த கடிதம் எப்படி கிடைத்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்

இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இக்கடிதத்தை வெளியிட்டிருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து சிபிசிஅய்டி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ஒரே நாளில் இழப்பீடு

மின் வாரியம் அறிவுறுத்தல்

சென்னை, டிச.8 தமிழ்நாட்டில் மின்விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ஒரே நாளில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகம் செய்து வருகிறது. அனைத்து நுகர்வோருக்கும் முறையாக மின்சாரம் கொண்டு சேர்க்கும் வகையில், சென்னையில் நிலத்துக்கு அடியில் புதைவடங்களாகவும், மற்ற இடங்களில் மின் கம்பங்கள் வாயிலாகவும் மின் விநியோகம் செய்யப்படுகிறது.

மின் விபத்து

இதனிடையே, மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தும், நிலத்துக்கு அடியில் உள்ள கேபிள்களில் இருந்து மின்கசிவு ஏற்பட்டும் சில நேரங்களில் பாதிப்புகள் நேரிடுகின்றன. இதன் மூலம் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், மின் விபத்து காரணமாக உயிரிழப்போரின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம், இரு கைகள், கால்கள், கண்களை இழந்தால் ரூ.3 லட்சம், ஒரு கை, கால், கண்ணை இழந்தால் ரூ.1.50 என லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

ஒரே நாளில் இழப்பீடு

இந்த இழப்பீடுகளை, மண்டல தலைமைப் பொறியாளரே வழங்கலாம். இருப்பினும், இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து தெடர்ந்து புகார்கள் வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக, அண்மையில் மின் வாரிய உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, மின் விபத்து காரணமாக உயிரிழந்தார் என்பதை உறுதி செய்ததும், விதிமுறைகளைப் பின்பற்றி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ஒரே நாளில் இழப்பீடு வழங்குமாறும், அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் இழப்பீட்டு வழங்குமாறும் தலைமைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *