மதச் சுதந்திரத்தை மீறும் இந்தியாவின்மீது தடை விதிக்கவேண்டும் பன்னாட்டு ஆணையம் அமெரிக்காவுக்கு பரிந்துரை

Viduthalai
2 Min Read

வாசிங்டன், மே 4- மத சுதந்திர நட வடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டுமென அமெரிக்க அரசுக்கு பன்னாட்டு மத சுதந்திர ஆணையம் (யுஎஸ்சிஅய்ஆர்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நிலவும் மத சுதந்திர சூழல் குறித்து யுஎஸ்சிஅய்ஆர்எஃப் ஆய்வு மேற்கொண்டது. இது தொடர் பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டில் இந்தி யாவில் மத சுதந்திரத்தை உறுதி செய் வதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுவிழந்தன.

மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகை யிலான சட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் இயற்றின. மதமாற்றம், ஹிஜாப் அணிதல், பசுவதை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இயற்றப் பட்ட சட்டங்கள், முஸ்லிம்கள், கிறிஸ்த வர்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்ட வர்கள், பழங்குடியினரைப் பாதித்தது.

மத சிறுபான்மையினரின் குரலைத் தொடர்ந்து ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற் கொண்டு வருகிறது. சிறுபான்மையி னரின் சொத்துகளை இடித்துத் தள் ளுதல், சட்டவிரோதச் செயல்கள் தடுப் புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய் தல், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மீது வெளி நாட்டு நன் கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள் ளிட்டவற்றின் மூலமாக அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன.

மத சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும். இருதரப்பு பேச்சுவார்த்தை யின்போது இந்த விவகாரத்தை இந்தி யாவிடம் அமெரிக்கா எழுப்ப வேண் டும். மேலும், மத சுதந்திர விவகாரத்தில் இந்தியாவை ‘அதிதீவிர பாதிப்புக்குரிய பகுதி’ என அறிவிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுஎஸ்சிஅய்ஆர்எஃப் வழங்கும் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட் டாயம் அமெரிக்க நாடாளுமன்றத் துக்கோ வெளியுறவு அமைச்சகத்துக்கோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பதிலடி: இந்த அறிக்கை குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறு கையில், ‘இந்தியா தொடர்பாக பார பட்சமான, உள்நோக்கம் கொண்ட கருத் துகளை அமெரிக்காவின் பன்னாட்டு மத சுதந்திரத்துக்கான ஆணையம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. நிக ழாண்டின் அறிக்கையிலும் அது தொடர் கிறது.

யுஎஸ்சிஅய்ஆர்எஃப்-இன் நம் பகத்தன்மையைச் சிதைக்க உதவும் இதுபோன்ற தவறான தகவல்களை இந்தியா நிராகரிக்கிறது. இத்தகைய முயற்சிகளை விடுத்து இந்தியா, அதன் பன்முகத்தன்மை, அதன் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசமைப்பு வழிமுறைகள் குறித்து சரியான புரிதலை யுஎஸ்சிஅய்ஆர்எஃப் வளர்த்துக் கொள் ளுமாறு வலியுறுத்துகிறோம்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *