இதுதான் கோவில் திருவிழாவா? மாமன், மைத்துனர் மாறிமாறி துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் வெட்கக்கேடு

Viduthalai
1 Min Read

அரசியல்

தேனி, மே 4- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசை யாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் 2 நாட்கள் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, முளைப் பாரி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினராம்.

விழாவின் இறுதி நாளில், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் துடைப்பத் தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி நேற்று (3.5.2023) அந்த நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்களின் மாமன், மைத்துனர் களுடன் கோவில் முன்பு கூடினர். பின்னர் அவர்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது. அதில் துடைப்பத்தை கழிவுநீர், சேறு மற்றும் சகதியில் நனைத்துக் கொண்டு மாமன், மைத்துனர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கினர். இந்தக் கேவ லத்தை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

துடைப்பத்தை கழிவுநீரில் நனைத்து தாக்கிக்கொள்வதால் குடும்பத்தில் சந்தோசம் நிலவும் என்றும் மேலும் நீண்டநாள் பிரிந்து வாழும் உறவுகள் திருவிழாவின்போது சந்தித்து துடைப்பத்தால் அடி வாங்கி கொள்வதால் மீண்டும் உறவு வளரும் என்றும் மூடத்தனங் களைப் பரப்பி வருகின்றனர்.  அப்பாவி மக்கள் பக்தியின் பெயரால் மூடநம்பிக்கைகளுக்கு இரையாகி காலத்தையும், பொருளையும் இழப்பதுடன் சுயமரியாதையையும், மானத்தை யும் இழக்கின்ற அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *