குடியாத்தம், மே 4 கடந்த 28.4.2023 அன்று குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் குடியாத்தம் நகர திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் தலைமை தாங்கினார்.பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார் தொடக்கவுரை ஆற்றினார்.
‘பெரியார் பிஞ்சு’ சு.அன்புச்செல்வன், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சு.வசுமதி ஆகியோர் உரையாற்றினர்.
வேலூர் மண்டல கழக தலைவர் வி.சடகோபன்,மண்டல மகளிரணி செயலாளர் ந.தேன்மொழி,வேலூர் மாவட்ட கழகத் தலைவர் இர.அன்பரசன்,வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரி தாசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி போராட்டம்,தமிழர் தலைவர் அவர்களின் தற்போதைய போராட்டம் மற்றும் வழிநடத்தல், தோள்சீலைப் போராட்டம், வைக்கம் போராட்டம், மகளிரின் இன்றைய நிலை,இவை குறித்து சிறப்பான கருத்துகள் பேசப்பட்டன.
இந்த நிகழ்வில் வேலூர் மண்டல மகளிரணி செயலாளர் ச.ஈஸ்வரி,மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா,பகுத்தறி வாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சுப்பிர மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் கு.வினாயகமூர்த்தி மருத்துவர் சிவா,ஆர்டிஸ்ட் சிவா,தோழர் சையத் அலீம், தோழர் சுனில் ஆகியோர் கலந்து கொண் டனர்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் தனபால் நன்றி கூறினார்.