நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதிகளில் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

1 Min Read

அரசியல்

நாகர்கோவில்,மே4- கன்னியாகுமரி மாவட்ட கழகம்  சார்பாக  மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை முற்றிலும்  ஒழித்து அவர்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வை, தன்னம்பிக்கையை  ஏற்படுத்தும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு  பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது. பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான  துண்டறிக்கை களை பொதுமக்களிடம் வழங்கி பரப் புரை செய்தனர் குமரி மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள். ஒழுகினசேரி  மற்றும்  நாகர்கோவில்  மாநகரப் பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு  கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன்  தலைமை தாங்கினார்.  கழக மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ்,   பகுத்தறிவாளர் கழக மாவட்ட  தலைவர் உ. சிவதாணு ஆகியோர் பரப்புரையை தொடங்கிவைத்தனர்.

கழக மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்  பா.பொன்னுராசன், பகுத்த றிவாளர்கழக செயலாளர் எம். பெரியார் தாஸ் அமைப்பாளர் இரா.லிங்கேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ்,திராவிடர் கழக மாநகர துணைத் தலைவர் கவிஞர். ஹ.செய்க் முகமது, தோழர்கள் பா.சு. முத்து வைரவன், ச.ச.மணிமேகலை உள்பட பலரும் கலந்து கொண்டனர் . தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள்  ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *