‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடுத்த சாதனை பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா சிறப்புப் பேருந்து தமிழ்நாடு முழுவதும் தொடக்கம்..!!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.5 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் உள்ளது.

மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ், பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் பல மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பயணம் செய்வதால் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரி பெற்றோர் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூரின் 4 வழித்தடங்களில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சிவசங்கரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். சென்னையில் மட்டும் இயக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள்  தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுவதாக அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்தார்.

இந்த சிறப்பு பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளை நோக்கி குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இயங்கும். ஒவ்வொரு காலையிலும் பணிமனைகளில் இருந்து புறப்படும் பேருந்துகள், மாணவர்களுக்கான குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று, கல்வி நிறுவன வளாகங்களுக்குள் இறக்கிவிடும். மாலையில் அதே வழித்தடத்தில் மாணவர்களை ஏற்றி திரும்பிச் செல்லும். இதன் மூலம் மாணவர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்காமல், பாதுகாப்பாக பயணிக்க முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *