நாட்டின் வரலாற்றை மாற்ற முயல்கிறது பா.ஜ.க. நிதிஷ்குமார் சாடல்

1 Min Read

பாட்னா,மே 5– நாட்டின் வரலாற்றை மாற்ற பாஜக முயல்வதாகவும், அதன் காரணமாகவே எதிரணியை ஒன்றிணைக்கும் பணியை தான் மேற்கொண்டு வருவதாக வும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டின் வரலாற்றை மாற்ற பாஜக முயல்கிறது. அதனைத் தடுத்து நிறுத்தவே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். எனக்கு தனிப் பட்ட திட்டம் என்று எதுவுமில்லை. அனைவரின் நன்மை யையும் கருத்தில் கொண்டே இந்த முயற்சியை மேற் கொண்டு வருகிறேன். தனிப்பட்ட நலனுக்காக நான் எதையும் செய்ய மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி டில்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை நிதிஷ் குமார் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து டில்லி முதல மைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், இடதுசாரி தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்தித்தார். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை  கொல்கத்தாவில் சந்தித்த நிதிஷ் குமார், பின்னர் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *