மறைந்த ஓய்வு பெற்ற சிங்கப்பூர் நண்பர் பழனியப்பனுக்கு இரங்கல்

4 Min Read

அரசியல்

சிங்கப்பூரில் நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகிய முக் கியமான அரசமைப்புகளில் சிறந்த மொழி பெயர்ப்பாள ராக – நன்கு பலராலும் அறியப்பட்ட நண்பர் 

திரு ஆ. பழனியப்பன் அவர்கள் நேற்று (4.5.2023) பிற்பகலில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

சிங்கப்பூருக்கு நாம் சென்றிருந்தபோது ஒரு முறை, நாடாளுமன்ற வளாகத்திற்கு நம்மை அழைத்து – ‘செம்மொழி ஆசிரியர் நண்பர் இலியாஸ்’ அவர்களுடன் – முழுமையான வரலாறு, விளக்கத்தை மிக நேர்த்தியாக நமக்குத் தந்த ஆற்றலாளர்.

சிறந்த பண்பாளர் – மனிதநேயர்! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர் களுக்கு நமது ஆறுதலையும், மறைந்த அவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

                                                                                                                                      கி.வீரமணி

சென்னை                                                                                                                     தலைவர்,   

                                                                                                                            திராவிடர் கழகம்                                                                                                                                                                          5.5.2023                                                                                                                                                                                                                                                                                                                              

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *