திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, டிச.4- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா சீரும் சிறப்புடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

மொழி வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையேற்று சிறப்பித்தார்.

11ஆம் வகுப்பு மாணவி ரா.சஹானா விழாவில் குழுமியிருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். 11ஆம் வகுப்பு மாணவி பா.தேவதர்க்ஷினி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முதல் கூட்டம் கடலூரில் 12ஆவது வயதில் தொடங்கி 93ஆவது வயது 2.12.2025 அன்று வரை தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டில் சிறிதும் விலகாமல் பெரியாரை உலக மயமாக்கும் உன்னத பணியை பற்றி மிகத் தெள்ளத்தெளிவாக உரை நிகழ்த்தி, மாணவிகள் ஆகிய நாமும் அய்யாவின் கொள்கைகளை  இந்த பிறந்தநாள் விழாவில்  ஏற்போம் என்று உறுதி ஏற்று அய்யாவின் பொன்மொழியை கூறி உரையை நிறைவு செய்தார்.

மேலும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் விதமாக மாணவிகள் ஆசிரியர் அவர்கள் ஆற்றிவரும் சமுதாயத் தொண்டு, அரும்பெரும் சாதனைகளை பாடலாலும், நடனமாடியும் அனைவரையும் பிரமிக்க வைத்தனர்.

ஆசிரியரின் பிறந்தநாள் மகிழ்வாக பள்ளி வளாகத்தில் பூமரக்கன்றுகளை தலைமையாசியை, ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து இயக்கங்களை சார்ந்த  (NSS, NCC, JRC, SCOUT & GUIDE) மாணவிகள் நட்டு மகிழ்ந்தனர். இறுதியாக அ.சனா ஹமிதா நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சி முழுவதையும் 11ஆம் வகுப்பு மாணவிகள் வே.சே.ஜனனி மற்றும் முத்.காருண்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *