விஜய்யின் ‘ரோடு ஷோ’வுக்கு புதுச்சேரியில் அனுமதி இல்லை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுச்சேரி, டிச.4- த.வெ.க. தலைவர் விஜய் புதுவையில் நாளை (5.12.2025) காலாப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரை ‘மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளித்தனர். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதனை காரணம் காட்டி, விஜய்யின் ‘ரோடு ஷோ’வுக்கு புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் ஏமாற்றத்துடன் த.வெ.க. நிர்வாகிகள் சென்னை சென்று விஜய்யுடன் ஆலோசனை நடத்தினர். இந்தநிலையில் நேற்று (3.12.2025) காலை புதுவை வந்த புஸ்சி ஆனந்த், சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மீண்டும் சந்தித்து பேசினார். அப்போது விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, ஏற்ெகனவே கொடுத்த வழிதடத்திற்கு பதிலாக சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை ½ கி.மீ. நடத்த அனுமதி தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுபற்றி முதலமைச்சர் ரங்கசாமி காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், புதுவையில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக வந்தால் அதனை சமாளிக்க முடி யாது. எனவே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.4- சாலையோர நடைபாதைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிராட்வேயைச் சேர்ந்த அரசு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- பிராட்வே மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களில் 90 சதவிகிதம் முறையான திட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இது போன்ற சட்டவிரோதமான கட்டடங்களுக்கும் எளிதாக மின்சார இணைப்பு உள்ளிட்ட இணைப்புகள் அதே வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் இருபுறமும் உள்ள நடைபாதைகளிலும் சட்டவிரோதமாக ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதனால், பொது மக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல் நடுத்தெருவில் நடக்கின்றனர்.

இது தொடர்பாக வழக்கு ஒன்று கடந்த 2020-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதாக சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பு வழக்குரைஞர் ஒளிப்படங்களைத் தாக்கல் செய்தார். ஆனால், உண்மையில் அந்த ஆக்கிரமிப்புகள் அப்படியேதான் உள்ளன. இது போன்ற நடைபாதைக் கடைகளை அகற்றக்கோரி சென்னை மாநகராட்சிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 26 புகார்கள் கொடுத்துள்ளேன். எந்தப் பயனும் இல்லை எனவே, மண்ணடி பகுதியைச் சுற்றி நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள சட்டவிரோத உணவகங்களை அப்புறப்படுத்த மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர், மண்ணடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அது தொடர்பான அறிக்கையை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *