பழனியில் மே 1- உழைப்பாளர் நாள்

0 Min Read

அரசியல்

பழனி கழக மாவட்டம் சார்பில் மே-1 உழைப்பாளர் நாள் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்விற்கு பழனி கழக மாவட்டத் தலைவர் மா.முருகன் தலைமையேற்றார்,  மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் ச.திராவிடச்செல்வன் (ப.க மாவட்டத் தலைவர்), சி.இராதாகிருட்டிணன் (நகரச்செயலாளர்)   க.மதனபூபதி (ஒன்றியத் தலைவர்), வழக்குரைஞர் ஆனந்தன் (நகரத் தலைவர் ஒட்டன்சத்திரம்), மு.ரகுமான், குண.அறிவழகன், ச.பாலசுப்பிரமணியன், ப.பாலன்,  சி.கருப்புச்சாமி உள்ளிட்ட கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ம.தி.மு.க, தமிழ்புலிகள், ஆதித்தமிழர் கட்சி, வி.சி.க. மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *