கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தண்ணீரோடு விளைநிலங்களில் ரசாயன கழிவு நுரை

1 Min Read

அரசியல்

ஓசூர், மே 5- ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் தண்ணீரோடு சேர்ந்து வரும் ரசாயன நுரை அருகில் உள்ள விளை நிலங்களை சூழ்வதால் 50 ஏக்கர் விவசாய நிலம்பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 640 கன அடி நீர் வருகின்றது. உபரி நீர் 6 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

வெளியேற்றப்படும் நீரில் அதிக நுரை பொங்கி பனிமாலைப்போல ஆற்றில் மிதந்து செல்கிறது. இந்த ரசாயன நுரை கரையோரம் உள்ள விவசாய நிலங்களை சூழ்வதால் 50 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்பட்டுள்ள தால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கருநாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப் படியே ஆற்றில் கலப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுவ தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *