தினத்தந்தி நிர்வாக ஆசிரியருக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.3- இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு 2021 முதல் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் படும் என்று 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ‘கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (2.12.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், 2024ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருதினை“ 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

கலைஞரின் எழுதுகோல் விருது 2021ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டில் மூத்த பத்திரிகையாளர் அய்.சண்முகநாதனுக்கும், 2022ஆம் ஆண்டு வி.என்.சாமிக்கும், 2023ஆம் ஆண்டு நக்கீரன் இரா.கோபால், சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தலைவர் வாழ்த்து

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.டி.இ.ஆர்.சுகுமாருக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். டி.இ.ஆர். சுகுமார், ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *