அந்தோ பாவம் கடவுள்! கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.2 எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பகுதியில் ஓர் அம்மன் கோயில் உள்ளது. 1.12.2025 அன்று காலை அர்ச்சகர் கோயிலைத் திறக்க வந்தார். அப்போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது

உள்ளே சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைக்க முடியாமல், அதை அப்படியே தூக்கிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அர்ச்சகர் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கோயிலில் கொள்ளையடிக்க வந்தவர்கள், உண்டியலை உடைக்க முடியாததால், அதை அப்படியே தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல, அருகே உள்ள மற்றொரு கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைப் பணம் திருடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் எம்.ஜி.ஆர். நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *