பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பில் சுயமரியாதை நாள் விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, டிச. 1- திருச்சி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாள் 26.11.2025 அன்று மாலை 5 மணி யளவில் நடைபெற்றது.

பணித்தோழர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பெரியார் துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலெட்சுமி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் முனைவர் வனிதா, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பாக்யலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழுவின் அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்தான் முதன் முதலில் தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளினை கொண்டாடி மகிழ்கின்றது என்றும் திராவிட இனத்திற்கு வழிகாட்டக் கூடிய நமது தமிழர் தலைவரின் பிறந்த நாள் உலகம் முழுவதிலுமுள்ள திராவிடத் தமிழினத்தினரால்  கொண்டாடப்பட உள்ளது என்றும் உரையாற்றினார்.

மேலும் அய்யா அவர்களின் சமுதாயப் பணிகளையும் பணித் தோழர்களின் மத்தியில் எடுத்துரைத்து , பிறந்தநாள் கொண்டாடிய பணித்தோழர்களுக்கு சிறப்பு செய்தார். பணித்தோழர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தமிழர் தலைவரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் கவுதமன் மற்றும் பொருளாளர் செல்வி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *