பீகார் தொழிலாளிக்கு கைமாற்று அறுவை சிகிச்சை வெற்றி மருத்துவர்களுக்கு துணை முதலமைச்சர் நேரில் பாராட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ. 30–- பீகாரைச் சேர்ந்த 28 வயதுத் தொழிலாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகக் கையைப் பொருத்திய ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்களை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

பீகார் தொழிலாளி

பீகாரைச் சேர்ந்த அந்த 28 வயதுத் தொழிலாளி, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது இடது கை தோள்பட்டையிலிருந்து முழங்கை வரை மிக மோசமாகச் சிதைந்துபோனது. அதேபோல், வலது கை மணிக்கட்டுப் பகுதி வரை சிதைந்திருந்தது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு கைகளும் சிதைந்திருந்த நிலையில், அவருக்கு இடது கையில் மணிக்கட்டிலிருந்து கீழே உள்ள பகுதியை வலது கையோடு இணைத்து, கரங்களை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்தச் சிக்கலான, சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பி. ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். சிகிச்சையில் இரத்தக் குழாய் மறுசீரமைப்பு முடிந்தவுடனேயே இணைக்கப்பட்ட கை புத்துயிர் பெற்றது.

இந்த சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களைச் சென்னை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் (28.11.2025) பாராட்டினார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “சென்னையில் பணியாற்றி வந்த பீகார் தொழிலாளி எதிர்பாராதவிதமாக ரயில் விபத்தில் சிக்கிக் கைகளை இழந்த நிலையில், அவருக்கு, ராஜீவ்காந்தி மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து, அவரது இடது கையின் ஒரு பகுதியை வலது முழங்கையுடன் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

மிக அரிதான கரங்களை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சை நமது நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அறுவை சிகிச்சையைத் திறமையாகச் செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *