திருப்பத்தூர், நவ. 30– பெரியார் பெருந்தொண்டர் விடுதலை வாசகர் வட்ட திருப்பத்தூர் மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி என்கின்ற ஞானதீபன் அவர்களை சிறப்பு திறனாளிகள் பிரதிநிதியாக திருப்பத்தூர் நகராட்சி நியமன உறுப்பினராக தமிழ்நாடு அரசு ஆணைப்படி திருப்பத்தூர் நகராட்சியால் தேர்வு செய்யப்பட்டார்.
.26.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் நகராட்சியில் ஆணையாளர், நகரமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இவருடைய தந்தை கிருஷ்ணன் அவர்கள் நீதிகட்சி தொடங்கிய காலத்திலிருந்து தந்தை பெரியாருடன் பயணித்தவர். தந்தைபெரியார் அவர்கள் தான் இவருக்கு வீரமணி என்று பெயர் சூட்டியவர். அய்யா அவர்கள், தன் உடல் ஊனம் முற்றிருந்தாலும் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, சிந்தனைகளை பரப்பி கொண்டிருந்தவர்.
இவருடைய சேவையை உணர்ந்து, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன் ஆகியோர்ரின் பரிந்துரையின்படி, திருப்பத்தூர் நகரமன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன் நியமனம் செய்து சிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழ் நாடு அரசு, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று இதற்கான தனிச்சட்டம் கொண்டு வந்தது.
இதன் மூலம் உள்ளாட்சி அமைப் புகளில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும் உரிமைகளையும் சமமாக பெறுவதற்கு வழிவகுக்கிறது.
அச்சட்டம் மூலமாக தான் வீரமணிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. இவரை போன்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தமிழ்நாடு முழுவதும் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,912 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
எதையும் சமூகநீதி கண்ணோட் டத்தில் பார்க்கும் தமிழநாடு முதலமைச்சர் அவர்களின், இந்த மாற்றுத்திறனாளிக்கான நியமன உறுப்பினர் தனிச்சட்டம், உடல் ஊனத்தால் புறந்தள்ளும், புறக்கணிக்கும் மக்களிடையே, அவர்களுக்கும் பதவிகொடுத்து அவர்களையும் மற்றவர்களை போல சரிசமமாக நடத்த, மதிக்க வழிவகை செய்துள்ளது.
அனைத்து நிலைகளிலும் சமூகநீதி, சமத்துவத்தை காக்க சிந்தித்து அதை சட்டமாக்கி நடைப்முறைபடுத்தும் சமூகநீதி காக்கும் சரித்திர நாயகருக்கு மாற்றுத் திறனாளிகள் சார்பில் நன்றிகளை உரித்தாக்கி கொள்வோம்.
இவரின் பதவியேற்பு நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பில் தோழர்கள் பங்கேற்று, வாழ்த்தி மகிழ்ந்தனர்.
