கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

30.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மாநில உரிமைகளை மதிக்காமல் இருப்பது, ரயில் திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில தேர்தல்,பாஜக தலைமை கவலை.

* பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் கூட்டத்தில், மகாகத்பந்தன் சட்டமன்ற உறுப் பினர்கள் தேஜஸ்வியை அவைத் தலைவராக தேர்வு செய்தனர்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு 22.78% இலிருந்து 21.39% ஆக குறைந்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்வதற்கு முன்பு அநீதியைத் தடுக்க உயர் மட்ட மதிப்பாய்வை நாட அறிவுறுத்தல்.

தி டெலிகிராப்:

* பல மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தம் தொடர்பாக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கோரும் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் இறப்புகளை தேர்தல் குழு கையாள்வதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அர்ச்சகர் அளிக்கும் திருமணச் சான்றிதழ் செல்லாது: மும்பை சிவில் நீதிமன்றம் தீர்ப்பு. தகுதிவாய்ந்த மாநில அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் எப்போதும் அர்ச்சகர் வழங்கிய கடிதத்தை விட செல்லுபடியாகும் என இறந்த மசகான் பன்வாலாவின் முதல் மனைவி மற்றும் சட்டப்பூர்வ வாரிசு என்று கூறி ஒரு பெண் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி தீர்ப்பு.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *