பொன்னேரி பொன்னம்மாள் படத்திறப்பு

1 Min Read

அரசியல்

பொன்னேரி, மே. 6- பொன்னேரி பகுதி  கழகத் தோழர் செல்வ ராஜ் தாயார் பொன்னம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு 30/4/2023 மாலை 7 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெற்றது . 

மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன் தலைமையில் , புழல் ஒன்றிய மேனாள் செய லாளர் ஜனாதிபதி, மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை தலை வர் கு.செல்வி ஆகியோர் தந்தை பெரியாரின் கருத்துகளை சிறப்பாக எடுத்துரைத்தனர். செல்வராஜ் நன்றி கூறினார். 

நிகழ்வில் பொன்னேரி நகர தலைவர் வே.அருள், ஒன்றிய செயலாளர் கெ.முருகன், தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார். மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர் மா.இளையராணி , வடகரை ஜெகத் விஜயகுமார் பெரியார் பிஞ்சுகள்  நவிலன் வெண்பா, மற்றும் தமிழ்ச்செம்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் செல்வராஜ் அவர்களின் குடும்பத்தினர் ஏராளமானவர்கள் பங்கேற்று பெரியாரின் கருத்துகளை கேட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *