சீர்காழி, மே 6- திராவிடர் கழக மயிலா டுதுறை மாவட்ட காப்பாளர் ச.மு.ஜெகதீசன் (வயது 94) நேற்று மறைவு எய்தியதை ஒட்டி இன்று (6.5.2023) காலை 10 மணி அளவில் அவரின் உடலுக்கு தலைமை கழ கம் சார்பிலும், மண்டலக் கழகம் சார்பிலும், மாவட்ட கழகம் சார் பிலும் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கிளைக் கழக தோழர் கள் மாலையிட்டு இறுதி மரியாதை செலுத்தி, வீரவணக்கம் தெரிவிக் கப்பட்டது. குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறப்பட்டது.
தமிழர் தலைவரின் வீர வணக்க செய்தி அனைவருக்கும் வழங்கப் பட்டது. நிகழ்வை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் ஒருங்கிணைத்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந் திரசேகரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மண்டல தலைவர் ஜி முருகையன், மாவட்ட தலைவர் குணசேகரன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் வீரையன், மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன், சீர்காழி நகரத் தலைவர் சபாபதி, வைத்தீஸ்வரன் கோயில் செயலா ளர் ராஜேந்திரன், வீரகோவிந்த ராஜ், திருவாரூர் மாவட்ட துணை தலைவர் அருண் காந்தி, நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், செயலாளர் புபேஷ் குப்தா, கொள் ளிடம் இளங்கோவன், மாவட்ட ப.க. செயலர் சாமிதுரை, மகளிர் அணி பொறுப்பாளர் செந்தமிழ்ச் செல்வி, வடலூர் புலவர் ராவணன், வடலூர் வழக்குரைஞர் திராவிட அரசு, வடலூர் தினமோகன், மயி லாடுதுறை நகர செயலாளர் காம ராஜ், விவசாய சங்க தலைவர் இம யவரம்பன், சட்டநாதன், பெரியார் செல்வம், பரசுராமன், மணிவேல், திருவாரூர் சிவக்குமார் மற்றும் தோழர்கள் உறவினர்கள் நண் பர்கள் இரங்கலுரை ஆற்றினர்.
இறுதி ஊர்வலம் வீரவணக்க முழக்கத்தோடு சென்று இறுதி நிகழ்வு நடைபெற்றது.