ஜெய்ப்பூர், மே 6- ராஜஸ்தான் மாநிலத்தில் விஎச்பி, பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள் திரிசூலங்களு டன் பேரணி, பொதுக் கூட்டத்தை நடத்தி மாநிலம் முழுவதும் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றன.
2014இல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைந்த பின்பு ஒவ்வொரு நாளும் சிறுபான்மையினர் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் நடப்பாண்டில் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் மாநிலங் களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஹிந்துத்துவா குண்டர்களின் அட்டூழியத் தால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமான ராஜஸ்தானில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாகவே பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் சிறு பான்மையினருக்கு எதிராக வன்முறை பேச்சு, அவர்கள் மீது தாக்குதல், ஆயுதம் ஏந்திய பேரணி என மாநிலத் தையே கடந்த சில மாதங்களாக பதற்ற சூழ்நிலையில் ஆழ்த்த முயல்கின்ற னர்.
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில் விஎச்பி, பஜ்ரங் தள் குண்டர்கள் திரிசூலங்களுடன் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தி, சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரிடமும் திரிசூலங்களை கையில் கொடுத்து “இந்து மதத்தை பாதுகாப்போம்” என உறுதிமொழி எடுக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2 அன்று கேக்ரி பகுதியில் பஜ்ரங் தள் குண்டர்கள் உள்ளூர் மக்கள் 1,100 பேரைத் திரட்டி திரிசூலங்களை கையில் கொடுத்து பொதுக்கூட்டம் மற்றும் பேரணி ஊர்வலம் நடத்தினர். பொதுக்கூட்டத்தில் சிறும்பான்மையினரை அதிகம் தாக்கிப் பேசியுள்ளனர். கேக்ரி போல ஏப்ரல் 8இல் மாதோபூரிலும், ஏப்ரல் 15 – சவாய் நகரிலும், ஏப்ரல் 17 அன்று ஜலவாரிலும், ஏப்ரல் 27இல் பத்சோராவிலும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்தப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்துப் பேரணி, பொதுக்கூட்டங்களில் திரிசூலங் களை கையில் கொடுத்து வன்முறையை தூண்டும் அளவிற்கு கொக் கரித்துள்ளனர்.
பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சு
ராஜஸ்தானின் பல பகுதிகளில் விஎச்பி, பஜ்ரங்தள் குண்டர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் அழைத்து வரப் பட்டிருந்தனர். அவர்களின் கையில் திரிசூலத்தை கொடுத்து, ‘ஜெய் சிறீ ராம்’ என்ற முழக்கங்களுக்கு மத்தி யில், பசு மாட்டைப் பாதுகாப்பதற்கும் அகண்ட பார தத்தை உருவாக்குவதற்கும் உறுதி மொழி கூற வற்புறுத் தப்பட்டது.
ஆயுதம் ஏந்துவார்களாம்
ராஜஸ்தான் மத்தியானா பகுதியில் ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஎச்பி தலைவர் சுரேந்திர ஜெயின் பேசுகையில், “முஸ்லிம்கள், அசோக் கெலாட் (ராஜஸ்தான் முதலமைச்சர்), மம்தா (மேற்கு வங்க முதலமைச்சர்) போன்ற இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல்வாதி களின் கெடுக்கப்பட்ட மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்துக்களை அழித்து விடுங்கள், நாங்கள் உங்களைப் பாதுகாப்போம் என்று முஸ்லிம்களிடம் சொல்லி யிருக்கிறார்கள். என்ன நடந்தாலும் அவர்களின் திட்டத்தை வெற்றியடைய விட மாட்டோம். எங்கு இஸ்லாம் பரவுகிறதோ, அங்கெல்லாம் முஸ்லிம் அல்லாத பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள். ராம ஜென்மபூமி பிரச்சனை கள் தீர்க்கப் பட்டது போல, மற்ற அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப் படும். உலகம் முழுவதும் காவி நிறமாக மாறும்” எனக் கொக்கரித்துள்ளனர்.
பாஜக ஆட்சியில் உள்ள அரியானா மாநிலத்தின் நாராயண்கர் பகுதியில் ஏப்ரல் 3 அன்று விஎச்பி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் திரிசூலத்தை கையில் ஏந்தி இந்து மதத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத் துக்கொண்டனர். நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் இளம்பெண்களும் இருந்தனர்.