மூன்றாம் ஆண்டு தொடக்கம்; முதலமைச்சருக்குத் தாய்க்கழகத்தின் வாழ்த்து!

2 Min Read

அரசியல்

இன்று (7.5.2023) காலை 10.15 மணியளவில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் அமைத்து, மூன்றாம் ஆண்டில் வெற்றி வாகையுடன் அடியெடுத்து வைக்கும் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினோம்.

எல்லையற்ற மகிழ்ச்சியுடன், ‘‘ஆளுமையின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட அரசியல் அறைகூவல்கள் தேவை – அதை நம் இன எதிரிகள் தக்க சமயத்தில் வழங்கி, தங்கள் ஆட்சியை பீடுநடை பெருமிதத்துடன் நடக்க உதவுகிறார்கள்.

வரலாறு படைக்க, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புகழ் ஒளி திக்கெட்டும் பரவ தாய்க்கழகத்தின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்று கூறி, வாழ்த்தினோம்! 

                                                                                                                                           கி.வீரமணி

சென்னை                                                                                                                       தலைவர்,

7.5.2023                                                                                                                  திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *