தஞ்சையில் இளைஞரணி சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது. இளைஞரணி சார்பில் தஞ்சை மாநகரில் சேகரிக்கப்பட்ட விடுதலை சந்தாக்கள் முதல் தவணையாக 5 சந்தாக்களை கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல் ஆகியோர் வழங்கினர். தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் (தஞ்சை, 4.5.2023).