புவனகிரி – பெருமாத்தூரில் புரட்சிக்கவிஞரின் 133 ஆவது பிறந்த நாள் விழா

1 Min Read

அரசியல்

புவனகிரி, மே 7 – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் விழா, பாரதிதாசனின் துணைவியார் பழனியம்மாள் பிறந்த ஊரான பெருமாத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் – 29.4.2023 அன்று மாலை 6 மணிக்கு புரட்சிக்கவிஞரின் உறவினரான பெருமாத் தூர் பெரியார் பெருந்தொண்டர் பழனி யாண்டி (வயது 90) தலைமையில் நடை பெற்றது.

மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், பேரூராட்சி மன்ற தி.மு.க. உறுப்பினர் ராம.செல்லபாண்டியன், அ.இராம லிங்கம் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.

மாவட்ட ப.க. தலைவர் த.செயராமன், கோ.நெடுமாறன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றிய பின்னர், கழகப் பேச்சாளர் யாழ்.திலீபன், புரட்சிக்கவிஞரின் தமிழ் தொண்டு, பகுத்தறிவுக் கொள்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டது புதுச் சேரியில் திராவிடர் கழகத் தலைவராகயிருந்து பணிபுரிந்தது  ஆகிய செய்திகளை விளக்க மாக உரைத்தார்.

நிகழ்ச்சியில், புவனகிரி ஒன்றிய செயலர் ஏ.பி.இராமதாசு, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் துரை.செயபால், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அ.சுரேஷ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

புவனகிரி கழக தலைவர் த.ஆசீர்வாதம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *