கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.11.2025

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மாநிலத்தில் நிலவும் அதிகாரப் போட்டி விவகாரத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரை டில்லிக்கு அழைத்துப் பேசி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும், துணை முதலமைச்சர் மல்லு பட்டி வேண்டுகோள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “வாக்குத் திருடன் ( சோரி)”, தவறான வாக்காளர் பட்டியல்கள், வாக்காளர் தகவல் சேர்க்கும் அதிகாரிகள் இறப்புகள், அருணாச்சலப் பிரதேசம் மீதான சீனாவின் கூற்று குறித்த கேள்விகளை ராகுல் எழுப்புவதை இழிவுபடுத்துவதன் மூலம் பாஜக நாட்டை தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கருநாடகாவில் அதிகார மோதலுக்கு மத்தியில், டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் சித்தராமைய்யா ஆதரவாளர் பரமேஸ்வரா கருத்து.

தி இந்து:

* ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் ஆதரவு; பதவிக்காலத்தை குறைப்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல என  நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

* அரசியலமைப்பைக் காப்பாற்ற நடத்தப்படும் பேரணியை மோடி அரசு ரத்து செய்வது ஒரு ஹிந்து ராஷ்டிராவை உருவாக்குவதற்கான சதி என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உதித் ராஜ் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* குடியுரிமையை வாக்குச்சாவடி நிலை அதிகாரி (பிஎல்ஓ) தீர்மானிப்பதா? வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையம் வரம்பு மீறுகிறது: உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *