பெரியார் பிஞ்சுகளுக்கானபழகுமுகாம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து

1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

குடந்தை, மே 7 – தஞ்சாவூர் வல்லத்தில் சிறப்புடன் இயங்கும்  பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் பெரியார் பிஞ்சுகளுக்கான பழகு முகாம் நடைபெற்றது. 

இதில் 2023 மே மாதம் முதல் தேதி தொடங்கி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் குழந் தைகளுக்கு பெரியாரியல் பற்றிய வகுப்பு எடுத்தார். 

இந்தப் பழகு முகாமில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கும்பகோணம் (மல்டி ஸ்பெஷாலிட்டி)அன்பு மருத்துவமனையின் சார்பாக, அதன் நிர்வாக இயக்குநர்-வழக்குரைஞர் கரிகாலன் உண்மை, மேலாளர் பிரசன்னா, கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை க.அன்பழகன், மற்றும் அவர்கள் சகோதரர் அன்பு மருத்துவமனை  இயக்குநர் ஆனந்தம் கணபதி சாக்கோட்டை, ஆகி யோர்,முகாமில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் தஞ்சை மண்டல கழகத்தின் செயலாளர் குடந்தை க.குருசாமி அவர்கள் மூலமாக தோல் பை வழங்கி மருத்துவமனையின் சார்பாக வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள். 

பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும், திராவிடர் கழகத்தின் சார்பாகவும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *