நன்கொடை

1 Min Read

ஈரோடு வைராபாளையம் பெரியார் பெருந்தொண்டர் அறிவுக்கன்பன் என்கின்ற குப்புசாமி அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்தநாளை (22.11.2025) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.75,000 காசோலை வழங்கினார். அவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடர் கழகத்தில் பல்வேறு சிறப்பான பணிகளை செய்துள்ளார். 20க்கும் மேற்பட்ட பகுத்தறிவு நூல்களை எழுதியுள்ளார் கோவை கு.வெ.கி. ஆசான் மற்றும் சோமசுந்தரம் அய்யாவோடு நெருக்கமாகஇருந்து இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இயக்கம் சார்பாக பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்டச் செயலாளர் மணிமாறன், மாநகரச் செயலாளர் தே.காமராஜ் அவரது மகன் நெடுமாறன், பேரன் இளஞ்சேரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *