கூட்டாட்சியை நிலைநிறுத்தி மாநில உரிமை காப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை, நவ.27- அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தையொட்டி ‘வரையறுக்கப் பட்டுள்ள கூட்டாட்சியை நிலை நிறுத்தி; மாநிலத்தின் உரிமைகளை பாதுகாப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (26.11.2025) பதிவிட்டிருப்பதாவது:

‘‘இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ ஒரு கருத்தியலுக்கோ மட்டுமானதல்ல, அதன் மக்கள் அனைவருக்குமானது. பாபாசாகேப் அம்பேத்கரின் இந்த பரந்த பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராகப் போராடும் நமது மனவுறுதியை இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில் மீண்டும் உறுதிகூறுகிறோம்.

கூட்டாட்சியியலை நிலைநிறுத்தவும், அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து நமது குடியரசைக் காப்பதே அரசியலமைப்பு சட்டத்துக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *