தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – பெரியார் திடலுக்கு வருகை

1 Min Read

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி,  அவர், சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு இன்று (27.11.2025) காலை 8.30 மணி அளவில் வருகை தந்து, மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அவருக்குத் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சால்வை அணிவித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துக் கடிதம், புத்தகங்களை வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ்நாடு

தொடர்ந்து  அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளி கள் நினைவிடத்திற்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பிறகு, பிறந்த நாள் விழா மேடைக்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணி வித்து, பிறந்த நாள்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *