ஆசிரியர் தகுதித் தேர்வில் சட்டத் திருத்தம் தேவை! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ.26- ‘டெட்’ தேர்வு தொடர்பாக கல்வி உரிமைச் சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழும சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்து ஆசிரியர்களை பாதுகாக்குமாறு பிரதமர் மோடிக்கு நேற்று (25.11.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடித விவரம் வருமாறு:-

ஆா்டிஇ-2009 பிரிவு 23, என்சிடிஇ சட்டம்-1993 பிரிவு 12 ஏ-இல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியா்களைப் பாதுகாப்பதுடன், பதவி உயா்வுகளுக்கு தகுதி உடையவா்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

உச்சநீதிமன்றத்தால் அண்மையில் வழங்கப்பட்ட தீா்ப்பில், ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியா்களும், அந்தப் பணியில் தொடர 2 ஆண்டுகளுக்குள் டெட் தகுதியைப் பெற வேண்டும். மேலும், 5 ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியா்கள் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், டெட் தகுதி பெறாவிட்டால் பதவி உயா்வுக்குத் தகுதியற்றவா்களாக இருப்பாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 23.8.2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு, டெட் போன்ற புதிய தகுதித் தேவைகளிலிருந்து என்சிடிஇ தொடக்கத்தில் விலக்கு அளித்திருந்தது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தற்போதைய தீா்ப்பு, ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட விலக்கை மீறி, டெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வேலை பறிக்கப்படும்?

இதன்விளைவாக, இந்த ஆசிரியா்கள் தற்போது 2 ஆண்டுகளுக்குள் டெட் தோ்ச்சி பெற வேண்டும்; இல்லாவிடில், அவா்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த நிா்வாக சிரமத்தையும், ஆசிரியா்களுக்கு தனிப்பட்ட சிரமத்தையும் ஏற்படுத்தும். பணி நிபந்தனைகளில் இத்தகைய மாற்றம் மற்றும் நியமனத்துக்குப் பின்னா் பதவி உயா்வுக்கான அவா்களின் நியாயமான எதிா்பாா்ப்பில் இடையூறு என்பது, ஆசிரியா்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும், இது ஆசிரியா்களின் நியமனத்தின்போது நடைமுறையில் இருந்த சட்டபூா்வ விதிகளின்கீழ் முழுமையாக தகுதி பெற்று, முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களில் பெரும்பான்மையோரை நேரடியாகப் பாதிக்கிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்படுகின்றனா். நியமனம் செய்யப்பட்ட நேரத்தில் அவா்கள் அனைவரும் நிா்ணயிக்கப்பட்ட அனைத்து கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் பூா்த்தி செய்தவா்கள். மேலும், சட்டப்படியான மற்றும் முறையான செயல்முறைகள் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்கள்.

பணி உரிமைகளில் இடையூறை…

அதோடு 2011-இல் டெட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவா்கள் பணியில் சோ்ந்தவா்கள். இந்த ஆசிரியா்களுக்கு டெட்-அய் முன்தேதியிட்டு அமல்படுத்துவது என்பது, அவா்கள் பணியில் தொடா்வதற்கும் மற்றும் பதவி உயா்வுகளுக்கான தகுதிக்கும் நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்ட பணி உரிமைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை உருவாக்குகிறது.

இது மாநிலத்தில் நிா்வாக ரீதியாக சாத்தியமற்ற ஒரு நிலையை உருவாக்குகிறது. பள்ளிக் கல்வி அமைப்பின் செயல்பாட்டைச் சீா்குலைக்கும் வகையில் கடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

முன்தேதியிட்டு இதை அமல் படுத்துவது என்பது, பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாடு முழுவதும் கண்கூடாகத் தெரியும். ஆள்சோ்ப்பு சுழற்சிகள், தகுதியான ஆசிரியா்கள் கிடைக்கும் தன்மை மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணி நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில், எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியா்களை மாற்றுவது சாத்தியமற்றது.

பதவி உயா்வை மறுப்பது

மேலும், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தகுதியைக் காரணமாகக் கொண்டு மட்டும், நீண்ட காலமாக பணியாற்றி வரும் அனுபவம் பெற்ற ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான வாய்ப்புகளை மறுப்பது என்பது, பெருத்த அளவிலான சிரமத்தையும் தேக்க நிலையையும் ஏற்படுத்துகிறது.

ஆா்டிஇ சட்டத்தின் பிரிவு 23-இல் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புரைகள் காரணமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியா்கள் இவ்வாறு பாதிக்கப்படுவாா்கள் என்றும், இந்தக் குறிப்புரையால் ஏற்படும் பாதிப்பு என்பது, பிரிவுக்கூறு 21ஏ-இன் கீழ் அரசமைப்பு ரீதியான கல்வி உரிமைக்கும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

பிரதமா் அறிவுறுத்த வேண்டும்

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆா்டிஇ- 009 பிரிவு 23 மற்றும் என்சிடிஇ-1993 பிரிவு 12-ஏ ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய கல்வி அமைச்சகத்துக்கு பிரதமா் மோடி அறிவுறுத்த வேண்டும்.

அப்போதுதான் 23.8.2010-க்கு முன்பு பணியில் இருந்த ஆசிரியா்கள் பாதுகாக்கப்படுவதுடன், பதவி உயா்வுகளுக்கு தகுதி உடையவா்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய இயலும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *