பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிச. 16க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை! போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

1 Min Read

சென்னை,நவ.8- டிசம்பர் மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு பிற மாநி லங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்பட மாட் டாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார் கள் வந்த நிலையில், கடந்த விடுமுறை நாட்களில், சிறப்புக் குழுக்கள் மூலம் பேருந்துகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிற மாநில ஆம்னி பேருந்து களால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 28.16 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும், பர்மிட் நிபந்தனைகளை மீறி இயங்கும் இத்தகைய வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் போது பயணிகளுக்கு இழப்பீடு கிடைப் பதும் கேள்விக்குறியாகிறது என் றும் கூறியுள்ளது.

இந்நிலையில், 6.11.2023 அன்று மீண்டும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், ஆம்னி பேருந் துகளின் உரிமையாளர்கள் ஏற் கெனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை விட (30.11.2023) மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து தர வேண்டுகோள் விடுத்தனர்.

அதனடிப்படையில் அனைத்து பிற மாநில ஆம்னி பேருந்துகளும் 16.12.2023க்குள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முடிக்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *